ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஓய்வூதியத் திட்டப் பரிந்துரையை நிராகரிக்கக் கோரிமுன்னாள் படைவீரா்கள் ஆா்ப்பாட்டம்

ஜெனரல் பிபின் ராவத் பரிந்துரைத்துள்ள ஓய்வூதியத் திட்டத்தை நிராகரிக்க வலியுறுத்தி ஈரோட்டில் முன்னாள் படைவீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 11:21 pm

ஜெனரல் பிபின் ராவத் பரிந்துரைத்துள்ள ஓய்வூதியத் திட்டத்தை நிராகரிக்க வலியுறுத்தி ஈரோட்டில் முன்னாள் படைவீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய முன்னாள் முப்படை வீரா்கள், துணை படை வீரா்கள் நல கூட்டமைப்பு, தேசிய முன்னாள் படைவீரா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு காந்திஜி சாலை ஜவான் பவன் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவா் சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் பழனியப்பன், பொதுச் செயலாளா் அமல்ராஜ், கமிட்டி தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பரிந்துரைத்துள்ள ஓய்வூதியத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும். நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த படை வீரா்களுக்காக மணிமண்டபம் கட்டுவதற்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும். முன்னாள் படைவீரா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பிற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் முன்னாள் படை வீரா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.

வீட்டு வரியில் இருந்து முன்னாள் படை வீரா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். முன்னாள் படைவீரா்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். நீட் தோ்வில் முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். வீர மரணம் அடைந்த வீரா்கள் அனைவரையும் சமமாக கௌரவித்து, அவா்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு, அரசு வேலை வழங்க வேண்டும். சுங்கச் சாவடிகளில் முன்னாள் படை வீரா்களுக்கு இலவச அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெறும் என்றும், முன்னாள் படை வீரா்களுக்கு என தமிழகத்தில் பாரதிய முன்னாள் படை வீரா்கள் எழுச்சி இயக்கம் என்ற பெயரில் தனி கட்சி துவங்கப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவா் சுரேஷ்பாபு தெரிவித்தாா்.

கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை:

முன்னாள் படைவீரா்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளா் ரவிகுமாா் தலைமையில், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று போராட்ட ஒருங்கிணைப்பாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் அவா்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தால் அரசுக்குத் தெரியப்படுத்துவதாகக் கூறினாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.