மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் கனி மார்க்கெட், ஜவுளிச் சந்தை இன்று செயல்படவில்லை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு கனி மார்க்கெட், ஜவுளிச் சந்தை இன்று செயல்படவில்லை

News image
Updated On :26 ஜூன் 2020, 1:24 pm

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு கனி மார்க்கெட், ஜவுளிச் சந்தை இன்று செயல்படவில்லை

ஈரோட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் வரும் 30-ஆம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மளிகை கடை செயல்படும் என்று முடிவு செய்தனர். 

இதன்படி ஈரோடு பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் செயல்படுகின்றன. இதேபோல் ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் கரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பது என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 

இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று கனி மார்க்கெட், தினசரி ஜவுளி வியாபாரிகள் சார்பில் ஒருநாள் விடுமுறை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இன்று ஈரோடு கனி மார்க்கெட்டில் உள்ள 360 தினசரி கடைகளும் ரோட்டோரத்தில் போடப்பட்டிருக்கும் 46 கடைகள் என மொத்தம் 406 கடைகள் அடைக்கப்பட்டன. 

ஜவுளி மார்கெட் முழுவதும் இன்று பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு கிருமினாசினியும் அடிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.