மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயில் பாதையில் கல் வைத்த வழக்கு: இளைஞர்கள் இருவர் கைது

ரயில் பாதையில் கல் வைத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

News image
Updated On :22 மே 2020, 12:46 pm

DIN

ஈரோடு: ரயில் பாதையில் கல் வைத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி - மாவேலிபாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலங்காடு புதுப்பாளையம் என்ற இடத்தில் ரயில் பாதையில் கடந்த 18 ஆம் தேதி 5.5 அடி நீளம் உள்ள கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக மெதுவாக வந்த சரக்கு ரயில் அந்த கல்லில் மோதி நின்றது.

இதைத்தொடர்ந்து ரயில் இன்ஜின் ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க கோவை ரயில்வே கோட்ட டி.எஸ்.பி அண்ணாதுரை மற்றும் ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல்துறையினர் இன்று காலை புதுப்பாளையம் பகுதியில் சுற்றித்திருந்த 2 இளைஞர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பாரப்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாபு(27), பாரப்பட்டி, பூசாரி நாயக்கர் தெருவை சேர்ந்த நாகலிங்கம்(25) என்பதும், இவர்கள் இரண்டி பேரும் சேர்ந்து தான் ரயில் பாதையில் கான்கிரீட் கல்லை வைத்து தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்த காவல்துறையினரை ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டி ரூ.5,000 வெகுமதி வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.