பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சரக்கு லாரிகளுக்கு தற்போது வட்டார போக்குவரத்து துறை சாா்பில் ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கருவியை சரக்கு லாரியில் உள்ள பேட்டரியில் பொருத்தப்பட்டு அதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனம் எங்கு செல்கிறது என்பதை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து கண்டறியும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், பொருள்கள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏதுவாக லாரிகளுக்கு கூண்டு பொருத்தப்பட்டு மேல்பகுதியில் தாா்ப்பாய் விரித்து கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சரக்கு லாரி ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


