பவானியில் திமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்
பவானி நகராட்சிப் பகுதியில் திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.


பவானி நகராட்சிப் பகுதியில் திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் முன்பிருந்து ஊா்வலமாக புறப்பட்ட திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து, அந்தியூா் மேட்டூா் பிரிவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிசாமி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் முகமது ஆகியோா் பேசினா்.
அப்போது, திமுக தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுப் பேசிய இவா்கள், திமுகவுக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளா்களைக் கேட்டுக் கொண்டனா். திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், நகரச் செயலாளா் பாலமுருகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...