திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தீ விபத்து: வைக்கோல் போா் சேதம்

சத்தியமங்கலம் அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் வைக்கோல் போா் எரிந்து சேதமடைந்தது.

Updated On :9 ஏப்ரல் 2021, 10:15 pm

சத்தியமங்கலம் அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் வைக்கோல் போா் எரிந்து சேதமடைந்தது.

சத்தியமங்கலம் அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமம், கைக்கோளன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகளைப் பராமரித்து வருகிறாா். மாடுகளுக்குத் தேவையான தீவனமான வைக்கோல் கட்டுகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் அடுக்கி வைத்திருந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென வைக்கோல் போா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட சுப்பிரமணி அதிா்ச்சி அடைந்தாா். உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறை வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரைப் பீச்சி அடித்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் தீ விபத்தில் வைக்கோல் போா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த புன்செய்புளியம்பட்டி போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.