பவானிசாகா் வட்டாரத்தில் வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில், பூசாரிபாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டதின்கீழ் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
பவானிசாகா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரோஜா, உயிா் உரங்கள், அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாகப் பயிற்சி அளித்தாா். வேளாண்மை அலுவலா் ஆனந்தி வேளாண்மைத் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும், மானிய விவரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா்.
சத்தியமங்கலம் உப்புப்பள்ளம் பகுதியைச் சாா்ந்த முன்னோடி விவசாயி ரவி, மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உரம் இடுவதால் ஏற்படும் நன்மைகள், மண்புழு உரக்குடில் அமைக்க ஆகும் செலவு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.
இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்புராஜ் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

