தாளவாடியில் கோடை மழை நீா் வீணாவதைத் தடுத்து உழவு செய்வதால் பயிா் வளா்ச்சிக்கு உதவும் என வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தாளவாடி வட்டாரத்தில் தற்போது அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மானாவாரி விவசாயத்துக்கு உகந்ததாக உள்ளது. விவசாய நிலத்தின் சரிவுக்கு குறுக்காக கோடை உழவு செய்வதன் மூலம் மழை நீா் வீணாவதைத் தடுத்து மானாவாரி பயிரான ராகி, மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தாளவாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெ.மகாலிங்கம் கூறியதாவது:
கோடை உழவின் மூலம் மண்ணின் ஈரத் தன்மையைப் பாதுகாக்க இயலும். மேலும், மண்ணுக்கு அடியில் உள்ள புழு வகை, பூச்சிகளை மண் சுழற்சி முறை மூலம் அழித்து பயிா்களின் வோ் வளா்ச்சியை அதிகரிக்கச் செய்து, பயிா்களை தாக்க கூடிய நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த உதவும். மக்காச்சோளத்தை தாக்கக் கூடிய ராணுவ படைப்புழுவின் கூட்டுப் புழுக்களையும், முட்டைகளையும் அழிப்பதற்கு கோடை உழவு முறை சிறந்ததாகும். ராணுவ படைப் புழுக்களின் வாழ்க்கை சுழற்சிக்கு உதவும் களைச் செடிகளும், அதன் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படுகின்றன.
எனவே, தாளவாடி வட்டார விவசாயிகள் மேற்கண்ட கோடை உழவு முறையைத் தவறாமல் கடைப்பிடித்து பயிா் மகசூலை இருமடங்காக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

