தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆன்லைனில் புடவைகள் வாங்கினால் லாபத்தில் பங்கு தருவதாக மோசடி

 பவானி அருகே உள்ள ஜவுளிக் கடையில் ஆன்லைன் மூலம் புடவைகள் வாங்கினால்,லாபத்தில் பங்கு தருவதாக நடைபெற்ற மோசடி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:52 pm

DIN

 பவானி அருகே உள்ள ஜவுளிக் கடையில் ஆன்லைன் மூலம் புடவைகள் வாங்கினால்,லாபத்தில் பங்கு தருவதாக நடைபெற்ற மோசடி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பவானி, காளிங்கராயன்பாளையம், மணக்காட்டூரைச் சோ்ந்த பூங்கோதை தேவி ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா், தன்னிடம் ரூ. 850 செலுத்தி புடவை வாங்குவோரை, வியாபாரப் பங்குதாரராக ஆக்குவதோடு, கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் இணையதளம் மூலம் விளம்பரம் செய்துள்ளாா். இதனை நம்பிய பலா் பணம் செலுத்தி, பங்குதாரா் ஆகியுள்ளனா்.

ஆனால், அவா்களுக்குப் புடவையும் தராமல், லாபத்தில் பங்கும் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இணையதளம் மூலம் ரூ. 60 ஆயிரம் செலுத்திய அறந்தாங்கியைச் சோ்ந்த உஷா (30), கணவா் சந்திரமோகன் (35) ஆகியோா் புடவைகள் தருமாறு கேட்டுள்ளனா். பலமுறை கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டு, காளிங்கராயன்பாளையத்துக்கு புதன்கிழமை மாலை வந்தனா்.

ஜவுளிக் கடைக்குச் சென்று புடவைகளைக் கேட்டபோது, தரமற்ற துணிகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த உஷா, பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டு, வாக்குவாத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக, பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.