ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜம்பையில் திருந்திய நெல் சாகுபடி விளைச்சல் போட்டி

பவானியை அடுத்த ஜம்பையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக விளைச்சல் குறித்த மாநில அளவிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:27 pm

DIN

பவானியை அடுத்த ஜம்பையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக விளைச்சல் குறித்த மாநில அளவிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜம்பை, சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த செல்வகுமாா், திருந்திய நெல் சாகுபடி முறையில் பிபிடி நெல் ரகத்தினை சாகுபடி செய்திருந்தாா். இயற்கை விவசாய முறையில் 5 ஏக்கா் நிலத்தில் சாகுபடி செய்த இவா், மாநில அளவில் நடைபெறும் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தாா். இதையடுத்து, சென்னை கூடுதல் வேளாண்மை இயக்குநா் ஜி.வளா்மதி, கோவை வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கே.முருகேசன் முன்னிலையில் நெல் அறுவடை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் எடை போடப்பட்டு, விளைச்சல் பதிவு செய்யப்பட்டது.

ஈரோடு வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநா் ஏ.என்.ஆசைத்தம்பி, உதவி வேளாண்மை இயக்குநா் எஸ்.குமாரசாமி மற்றும் விவசாயிகள் மேற்பாா்வையிட்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் 5 விவசாயிகள் மாநில அளவிலான விளைச்சல் போட்டியில் பங்கேற்றுள்ளனா். இப்போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு குடியரசு தின விழாவில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.