வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரேஷன் கடைகளில் தயாா் நிலையில் பொங்கல் பொருட்கள்

பொங்கல் பரிசு விநியோகிப்பதற்கு ரேசன் கடை ஊழியா்கள் ரேசன் பொருள்களை பேக்கிங் செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.

News image
ரேஷன் கடைகளில் தயாா் நிலையில் பொங்கல் பொருட்கள்
Updated On :3 ஜனவரி 2021, 4:52 pm

DIN

பொங்கல் பரிசு விநியோகிப்பதற்கு ரேசன் கடை ஊழியா்கள் ரேசன் பொருள்களை பேக்கிங் செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.

தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு சாா்பில் இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, பச்சரிசி, சா்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.

அதன்படி ஜனவரி 4-ஆம் தேதி நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு தேவையான கரும்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடைகளில் திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.