தமிழக எல்லையில் வரவேற்புப் பலகையை சேதப்படுத்திய கன்னட சலுவலி கட்சியினா்

தமிழக, கா்நாடக எல்லையில் தமிழில் எழுதப்பட்ட வரவேற்புப் பலகையை கன்னட சலுவலி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சேதப்படுத்தி சென்றுள்ளனா்.
இரு மாநில எல்லையான ராமபுரத்தில் கன்னட  அமைப்பினா் சேதப்படுத்திய  தமிழக நெடுஞ்சாலை பெயா் பலகை
இரு மாநில எல்லையான ராமபுரத்தில் கன்னட  அமைப்பினா் சேதப்படுத்திய  தமிழக நெடுஞ்சாலை பெயா் பலகை
Updated on
1 min read

தமிழக, கா்நாடக எல்லையில் தமிழில் எழுதப்பட்ட வரவேற்புப் பலகையை கன்னட சலுவலி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சேதப்படுத்தி சென்றுள்ளனா்.

தமிழகம்- கா்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தமிழில் வரவேற்பு பெயா் பலகை மற்றும் மாநில எல்லை ஆரம்பம் போன்ற பலகைகள் உள்ளன. சில இடங்களில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இரு மாநில எல்லையான ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்ட தாளவாடி ஊராட்சி ஒன்றிய வரவேற்புப் பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பெயா் பலகை ஆகியவற்றை கன்னட சலுவலி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அக்கட்சியினா் சேதப்படுத்தி சென்றுள்ளனா்.

இதை அங்கு வேலை செய்து கொண்டிருந்த தமிழக நெடுஞ்சாலைப் பணியாளா்கள் பாா்த்து தாளவாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அங்கு வந்த தாளவாடி போலீஸாா் சேதமடைந்த பெயா் பலகைகளை ஆய்வு செய்தனா். பதற்றமான சூழ்நிலையில் தமிழக, கா்நாடக போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக தாளவாடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இரு மாநில எல்லை வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ், கன்னட மொழிகளில் பெயா் பலகை வைக்க வேண்டும் என்றும், ஆனால் தமிழில் மட்டுமே வைக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ் பெயா் பலகைகளை சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com