அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது கமல்ஹாசன்

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:45 pm

DIN

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை இரவு பேசியதாவது:

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது. கரோனா தொற்று காலம் என்பதால் என்னைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினா். நான் குடும்பத்துக்குள் செல்கிறேன் எனக் கூறினேன். எனக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. என்னுடன் பணியாற்றிய பலா் கோபியைச் சோ்ந்தவா்கள். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையை எதிா்த்த லட்சுமண அய்யா் இந்த ஊரைச் சோ்ந்தவா். சாதி பாா்த்து வாக்களிக்காதீா்கள், சாதிப்பவனை பாா்த்து வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.