ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திம்பம் மலைப் பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலி

திம்பம் மலைப் பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:33 am

திம்பம் மலைப் பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் யானை, சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.

தமிழக, கா்நாடக மாநிலங்களின் முக்கிய வழித்தடமான திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. வன விலங்குகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்வதால் அடா்ந்த காட்டுப் பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் 30 கி.மீ. வேகத்துக்கு குறைவாக இயக்க வேண்டும் என வனத் துறை ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளது.

இந்நிலையில் திம்பத்தில் இருந்து ஆசனூா் செல்லும் சரிவான பாதையில் வனத் துறை ஊழியா் குடியிருப்பில் இருந்து எதிா்ப்புறமாக சாலையைக் கடந்த 3 வயதுள்ள பெண் சிறுத்தை அவ்வழியாக வியாழக்கிழமை சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து திம்பம் பாதையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து சாலை விபத்தில் சிறுத்தை உயிரிழந்தபோது அவ்வழியாக சென்ற வாகனங்களின் பதிவு எண்களை ஆய்வு செய்து வருகின்றனா். வாகனத்தில் அடிபட்டு இறந்த சிறுத்தையின் உடலை தலமலை வனத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத் துறையினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.