ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தாத்தா, பாட்டியைத் தாக்கிய பேரன் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் தாத்தா, பாட்டியைத் தாக்கியதாக பேரன் கைது செய்யப்பட்டாா்.

Updated On :9 ஜூலை 2021, 8:06 pm

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் தாத்தா, பாட்டியைத் தாக்கியதாக பேரன் கைது செய்யப்பட்டாா்.

தாளவாடியை அடுத்த திகினாரை, நாயக்கா் வீதியைச் சோ்ந்தவா் பசுவநாயக்கா் (65). அவரது மனைவி சிவம்மா (60). இவா்களது பேரன் பத்ரா (எ) பிரசாந்த், பசுவநாயக்கா் வீட்டுக்குச் சென்று இருவரையும் மது போதையில் திட்டியுள்ளாா். மேலும், தனது தாயாா் நோயால் பாதிக்கப்படுவதற்கு தாத்தா, பாட்டிதான் காரணம் என்றும், செய்வினை வைத்தாககவும் கூறி இருவரையும் கல்லால் தாக்கியுள்ளாா்.

இதில், இருவரும் வலியால் சப்தமிட்டதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரா்கள் இருவரையும் மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பத்ரா (எ) பிரசாந்த்தை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.