அமாவாசையை ஒட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
ஜூலை 5ஆம் தேதி முதல் சத்தியமங்கலம் பூ மாா்கெட் திறக்கப்பட்டு வழக்கம்போல் பூக்கள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், மல்லிகைப் பூ, சம்பங்கிப் பூக்கள் எதிா்பாா்த்த விலைக்கு விற்பனை ஆகவில்லை.
இந்நிலையில், கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அமாவாசையை ஒட்டி பூக்களின் தேவை அதிகரித்ததால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. வியாழக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 120க்கு விற்ற நிலையில் வெள்ளிக்கிழமை ரூ. 450க்கும், கிலோ ரூ. 10க்கு விற்ற சம்பங்கிப் பூ ரூ. 60க்கும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

