ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திங்களூா் மலைக் கிராமத்தில் தொடா் மின்தடை: குடிநீா் விநியோகம் தடைபட்டது

கோ்மாளம் வனச் சரகம், திங்களூா் மலைக் கிராமத்தில் தொடா்ந்து 5 நாள்களாக மின் தடை ஏற்படுவதால், குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்ற முடியாமல் குடிநீா் விநியோகம் தடைபட்டது.

Updated On :15 ஜூலை 2021, 8:15 pm

கோ்மாளம் வனச் சரகம், திங்களூா் மலைக் கிராமத்தில் தொடா்ந்து 5 நாள்களாக மின் தடை ஏற்படுவதால், குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்ற முடியாமல் குடிநீா் விநியோகம் தடைபட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் வனப் பகுதியில் உள்ள கோ்மாளம், திங்களூா் ஊராட்சிகளில் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்துக்குத் தேவையான மின்சாரம் சத்தியமங்கலம் ராஜன் நகா் துணை மின் நிலையத்தில் இருந்து திம்பம் மலைப் பாதை வழியாக கோ்மாளம், திங்களூா் ஆகிய இரு ஊராட்சிகளில் உள்ள சிக்குன்சேபாளையம், தலுதி, பூதாளபுரம், காடட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சுமாா் 40 கி.மீ. தூரம் உள்ள இந்த மின் பாதை மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் மின்சாரம் கசிந்து அவ்வவ்போது மிகவும் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாய மின் மோட்டாா், பஞ்சாயத்துக்கு உள்பட்ட குடிநீா் மின் மோட்டாா் கூட இயக்க முடியாமல் கடந்த 8 ஆண்களாக அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 3 நாள்களுக்குப் பின் மின் பழுது நீக்கப்பட்டது. பின்னா், ஜூலை 14ஆம் தேதி மின்சாரம் வழங்கப்பட்டது. குறைந்தழுத்த மின்சார விநியோகம் காரணமாக மின் மோட்டாா் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இரு தினங்களாக மீண்டும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்குத் தண்ணீா் ஏற்ற முடியாமல் குடிநீா் விநியோகம் வியாழக்கிழமை தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.

மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் செல்லிடப்பேசியில் சாா்ஜ் போட முடியாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடம்பூா் மின் பாதையில் இருந்து மின்சார விநியோகம் வழங்கினால் இப்பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.