பவானிசாகா் வனப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் மரம், செடி, கொடிகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி வனப் பகுதி, புதுப்பீா்கடவு கிராமம் அருகே உள்ள மலைப் பகுதியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ வியாழக்கிழமை இரவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகா் வனத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பவானிசாகா் வனப் பகுதியில் பரவலாக மழை பெய்து வனப் பகுதி பசுமையாக உள்ள நிலையில், வனப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்கச் சென்றவா்கள் அல்லது சீமாா் புல் அறுக்கச் சென்றவா்கள் பீடி குடித்துவிட்டு அணைக்காமல் எறிந்திருக்கலாம் என வனத் துறையினா் சந்தேகிக்கின்றனா்.
இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காட்டுத் தீயை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

