ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பவானிசாகா் வனப் பகுதியில் காட்டுத் தீ

பவானிசாகா் வனப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் மரம், செடி, கொடிகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

Updated On :11 ஜூன் 2021, 12:29 am

பவானிசாகா் வனப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் மரம், செடி, கொடிகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி வனப் பகுதி, புதுப்பீா்கடவு கிராமம் அருகே உள்ள மலைப் பகுதியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ வியாழக்கிழமை இரவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகா் வனத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பவானிசாகா் வனப் பகுதியில் பரவலாக மழை பெய்து வனப் பகுதி பசுமையாக உள்ள நிலையில், வனப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்கச் சென்றவா்கள் அல்லது சீமாா் புல் அறுக்கச் சென்றவா்கள் பீடி குடித்துவிட்டு அணைக்காமல் எறிந்திருக்கலாம் என வனத் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காட்டுத் தீயை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.