பில்லூா் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 11,833 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் அவலாஞ்சி, நடுவட்டம், அப்பா்பவானி ஆகிய வனப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூா் அணைக்கு வந்து சோ்ந்தது. இதனால், பில்லூா் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியாதல் அணைக்கு வரும் உபரிநீரான 14 ஆயிரம் கன அடி நீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்த உபரிநீா் வியாழக்கிழமை பவானிசாகா் அணைக்கு வந்து சோ்ந்ததால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 11,833 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்ட உயரம் ஒரே நாளில் 1 அடி உயா்ந்து 90.27 அடியாக உள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.27 அடி, நீா்வரத்து 11,833 கனஅடி, அணையில் இருந்து பாசனத்துக்கு 1000 அடி நீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 21.76 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


