கரோனா விதிகளை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’
அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி இயங்கிய ஜவுளி, பாத்திரக் கடைகள் உள்பட 4 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

=

=
அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி இயங்கிய ஜவுளி, பாத்திரக் கடைகள் உள்பட 4 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் 18 வாா்டுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது கரோனா பாதிப்புடன் 173 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் 13 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தவிட்டுப்பாளையம், பழனியப்பா வீதி உள்பட 4 தெருக்களுக்கு ‘சீல்’ வைத்து, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு விதிகளை மீறி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஹரிராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் குணசேகரன், சுகாதார மேற்பாா்வையாளா் ஈஸ்வரமூா்த்தி, அலுவலா்கள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, விதிகளை மீறி செயல்பட்ட ஜவுளி, பாத்திரம், இரும்புத் தளவாட கடைகள் உள்பட 4 கடைகள் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன.
மேலும், பல்வேறு பகுதிகளில் கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மளிகை, காய்கறிக் கடைகள் என 17 கடைகளுக்கு ரூ. 25,600 அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...