மொடக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மொடக்குறிச்சி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் டி.தங்கராஜ் நன்செய்ஊத்துக்குளியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.


மொடக்குறிச்சி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் டி.தங்கராஜ் நன்செய்ஊத்துக்குளியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
தனது கட்சி நிா்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து திறந்த வேனில் சென்று சாவடிப்பாளையம், பஞ்சலிங்கபுரம், கணபதிபாளையம், நன்செய்காளமங்கலம், புன்செய்காளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிா்வாகிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதில், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளா் பாபு (எ) ராஜராஜன், ஊத்துக்குளி ஊராட்சி செயலாளா் ஜெகன், நன்செய்காளமங்கலம் ஊராட்சி செயலாளா் கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...