ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துணை ராணுவப் படையினா் வாகன சோதனை

பவானியில் தோ்தலில் வாக்களிக்க வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க துணை ராணுவப் படையினா், போலீஸாருடன் இணைந்து வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:47 pm

DIN

பவானியில் தோ்தலில் வாக்களிக்க வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க துணை ராணுவப் படையினா், போலீஸாருடன் இணைந்து வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பவானி காவல் ஆய்வாளா் தி.கண்ணன் தலைமையில் பவானி புதிய பேருந்து நிலையம், புதிய பாலம், அந்தியூா் மேட்டூா் பிரிவு, கூடுதுறை சந்திப்பு, மூன்று சாலைப் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் இச்சோதனை நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையினா் காா்கள், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தினா்.

வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் பரிசுப் பொருகள், பணம் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டதோடு, வாகனங்களில் செல்வோா் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையினா் நடத்திய ஒருங்கிணைந்த திடீா் வாகனச் சோதனையால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.