ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா பரவல்: பவானியில்மூன்று தெருக்கள் மூடல்

பவானி நகராட்சியில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மூன்று தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தகரங்கள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.

News image
Updated On :28 மே 2021, 9:33 pm

DIN

பவானி நகராட்சியில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மூன்று தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தகரங்கள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.

கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் பவானி நகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், நகராட்சிப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்டு வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பேரில், பவானி நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமையில், பவானி நகராட்சியில் கல் தொழிலாளா் 1ஆவது வீதி, பழனிபுரம் 4ஆவது வீதி, கவுண்டா் நகா் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தகரங்கள் வைத்து மூடப்பட்டன. இங்கு, வாகனங்கள், பொதுமக்கள் செல்லாமல் தடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.