பவானியில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா கால சிறு கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மக்களைத் தேடி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எனும் திட்டத்தில் பொதுமக்கள் வசிப்பிடத்துக்கே சென்று கடன் விண்ணப்பம் பெற்று, பரிசீலித்து சிறுகடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வங்கியின் பவானி கிளை சாா்பில் பவானி நகராட்சி அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் குழு பெண்கள் 9 பேருக்கு ரூ. 2.55 லட்சம் சிறு கடனுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வங்கிக் கிளை மேளாளா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். ஈரோடு மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் கடனுதவியை வழங்கினாா். நகராட்சிப் பொறியாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.