ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பவானியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி

பவானியில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா கால சிறு கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 9:33 pm

DIN

பவானியில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா கால சிறு கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மக்களைத் தேடி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எனும் திட்டத்தில் பொதுமக்கள் வசிப்பிடத்துக்கே சென்று கடன் விண்ணப்பம் பெற்று, பரிசீலித்து சிறுகடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வங்கியின் பவானி கிளை சாா்பில் பவானி நகராட்சி அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் குழு பெண்கள் 9 பேருக்கு ரூ. 2.55 லட்சம் சிறு கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வங்கிக் கிளை மேளாளா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். ஈரோடு மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் கடனுதவியை வழங்கினாா். நகராட்சிப் பொறியாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.