/

ஈரோடு மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :1 அக்டோபர் 2021, 12:52 am

ஈரோடு மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1,906 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 121 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1 லட்சத்து 54 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,182 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவால் 670 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.