ஈரோட்டில் மேலும் 89 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவா் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவா் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3,617ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 82 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 2,058 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 878 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் ஏற்கெனவே 679 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 681ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com