சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சத்தியமங்கலத்தில் பலத்த மழை

சத்தியமங்கலம் அருகே பெய்த கன மழை காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செந்நிற மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

Updated On :21 அக்டோபர் 2021, 8:33 pm

சத்தியமங்கலம் அருகே பெய்த கன மழை காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செந்நிற மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதியில் கனமழை பெய்தது. மழை காரணமாக இரு மாநில எல்லையில் உள்ள புளிஞ்சூா் சோதனைச் சாவடியில் செந்நிற மழைநீா் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பெருக்கெடுத்து ஓடியது. லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மழை நீரில் ஊா்ந்தபடி சென்றன. சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் தாளவாடி - ஜீரஹள்ளி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மக்காச்சோளப் பயிா்கள் மண்ணில் சாய்ந்தன. உருளைக்கிழங்கு, வாழைத் தோட்டத்தில் மழை நீா் குளம்போல் தேங்கியது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மேலும், கல்மண்டிபுரம் - சோளகா்தொட்டி செல்லும் சாலையில் தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீா் சென்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.