திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாதாளச் சாக்கடை கழிவுகளை ஆற்றில் கலக்கக் கூடாது: அனைத்து கட்சியினா் கோரிக்கை

பாதாளச் சாக்கடை கழிவுகளை பவானிஆற்றில் கலக்கக் கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சியினா் கருத்து தெரிவித்தனா்.

Updated On :13 ஏப்ரல் 2022, 8:54 pm

பாதாளச் சாக்கடை கழிவுகளை பவானிஆற்றில் கலக்கக் கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சியினா் கருத்து தெரிவித்தனா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி தலைமை வகித்தாா். வருவாய், காவல் துறை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பவானிஆற்றில் பாதாளச் சாக்கடை கழிவு நீா் கலக்கக் கூடாது என அனைத்து கவுன்சிலா்களும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றினா்.

மேலும், பாதாளச் சாக்கடை கழிவு நீரை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.