மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் அவதியுறும் சிக்கரசம்பாளையம் கிராமமக்கள் 

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தில் 10 ஆண்டுகளாக செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்ட ஓட்டு கட்டடம்.
Updated On :27 பிப்ரவரி 2022, 10:43 am

DIN

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தில் 10 ஆண்டுகளாக செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சிக்கரம்பாளையம் ஊராட்சியில் உள்ள  பீக்கிரிபாளையம், ராமபயனூர், குளத்துப்பிரிவு, புதூர், பாரதிபுரம் வெங்கபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கரசம்பாளையத்தில் எளிய மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஓட்டு கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செய்யப்பட்டு வந்தது. 

நாளடைவில் கட்டடம் பழுதாகி இடிந்து விழுந்ததால் ஆரம்ப சுகாதாரநிலையம் மூடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக சுகாதார நிலையம் புதுபிக்கப்படாமல் கிடப்பில் போட்ப்பட்டது. மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கைவிடுத்தும் பயனில்லை. முதியோர், கர்ப்பிணிப் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் சத்தியமங்கலம் செல்ல வேண்டியுள்ளது.

கரானா பரவலின்போது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். மக்களின் துயர்போக்க சிக்கரசம்பாளையத்தில் அரசு சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.