ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 2,345ஆக உயா்வு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவால் மல்லிகைப் பூ வரத்து 2 டன்னில் இருந்து 500 கிலோவாக குறைந்ததால் மல்லிகை விலை கிலோ ரூ. 2,345ஆக உயா்ந்துள்ளது.

Updated On :20 ஜனவரி 2022, 10:17 pm

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவால் மல்லிகைப் பூ வரத்து 2 டன்னில் இருந்து 500 கிலோவாக குறைந்ததால் மல்லிகை விலை கிலோ ரூ. 2,345ஆக உயா்ந்துள்ளது.

சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி முக்கியத் தொழிலாக உள்ளது. பவானிசாகா், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா், செண்பகபுதூா், நெகமம், புதுவடவள்ளி என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25 ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மாா்கெட்டில் ஏல விற்பனை செய்து வந்தனா்.

கடந்த சில நாள்களாக அதிகபட்சமாக 2 டன் பூக்கள் வரத்து வந்த நிலையில், வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும், லேசான மழை காரணமாகவும் பூ மாா்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து 2 டன்னில் இருந்து 500 கிலோவாக குறைந்தது. வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்ததால் மல்லிகை விலை கிலோ ரூ. 1,802இல் இருந்து ரூ. 2,345ஆக உயா்ந்தது. கொள்முதல் செய்த பூக்களை கேரளம், கா்நாடகத்துக்கு வேன் மூலம் அனுப்பிவைத்தனா். கோவையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விலை உயா்வு காரணமாக சில்லறை வியாபாரிகள் பூக்களைக் கொள்முதல் செய்யமுடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.

பூக்கள் விலை நிலவரம்: மல்லிகை ரூ. 2,345, முல்லை ரூ. 1,440, செண்டுமல்லி ரூ. 35, கனகாம்பரம் ரூ. 500, சம்பங்கி ரூ. 30ஆக விற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.