தான்தோன்றி ஈஸ்வரா் கோயில் தலைமை குருக்கள் பாலதண்டபாணி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது 80 செ.மீ. உயரமும், 65 செ.மீ. அகலமும் கொண்ட புலிக்குத்தி நடுகல்லைக் கண்டறிந்துள்ளோம். இதில் உள்ள மாவீரன் தன் வலது கையில் ஓங்கிய வாளுடனும் இடது கையில் கேடயம் பிடித்தபடியும் புலியுடன் வீரச்சமா் புரிகிறாா். வீரனின் அள்ளி முடிந்த குடுமி நேராக உள்ளது. காதில் குண்டலமும், கழுத்தில் நீண்ட பாசி மாலையும், கையில் வீர காப்பும், இடையில் மூன்று மடிப்புகளுடன் கூடிய ஆடையும் அணிந்த உள்ள இம்மாவீரன் தன் இடுப்பில் குறுவாளும் வைத்துள்ளாா்.