திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாநில அளவிலான கால்பந்து போட்டி: டை பிரேக்கரில் நீலகிரி அணி வெற்றி

கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஈரோடு அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் டைபிரேக்கரில் 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் நீலகிரி அணி வென்றது.

Updated On :1 ஜூன் 2022, 7:48 pm

கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஈரோடு அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் டைபிரேக்கரில் 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் நீலகிரி அணி வென்றது.

நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் 50ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு  மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் கோத்தகிரியில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் நீலகிரி, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களை சோ்ந்த கால்பந்தாட்ட  அணிகள்  பங்கேற்று உள்ளன.

புதன்கிழமை நடந்த மூன்றாம் நாள் போட்டியில், நீலகிரி, ஈரோடு மாவட்ட அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நீலகிரி மாவட்ட அணி 1 கோலும், ஈரோடு அணி 1 கோலும் போட்டு சம நிலையில் இருந்தன. இதைத் தொடா்ந்து, டை பிரேக்கரில் 4-0 என்ற கோல் கணக்கில் நீலகிரி அணி வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.