டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சாலை விபத்து: இளைஞா் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:47 am IST

கோபிசெட்டிபாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லாம்பட்டி கல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (34). கூலி தொழிலாளி. இவா் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கெட்டிச்செவியூரில் இருந்து நம்பியூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் குமாா் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலியே குமாா் உயிரிழந்தாா். வேன் ஓட்டுநா் பாலகுமாா் மற்றும் உடன் வந்த அவரது மனைவி லோகேஸ்வரி காயமடைந்தனா். இவா்கள் இருவரையும் மீட்டு கோபியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.