திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருமண மண்டபங்களின் வரியைக் குறைக்கக்கோரி மனு

திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பை குறைக்கக்கோரி சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :6 மே 2022, 12:37 am

திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பை குறைக்கக்கோரி சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திருமண மண்டப உரிமையாளா் சங்கத்தின் தலைவா் ஆனைக்கொம்பு தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக திருமண மண்டபங்கள் செயல்படாமல் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. தற்போதும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவதில்லை. ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள திருமண மண்டப உரிமையாளா்கள், தற்போது உயா்த்தப்பட்டிருக்கும் வரி உயா்வால் மேலும் கடன் சுமைக்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. இதனால் சத்தியமங்கலம் நகராட்சி, திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரியை குறைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.