அந்தியூரில் ரூ.86.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்
அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தில் ரூ.86.75 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள்


அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தில் ரூ.86.75 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் புனரமைப்பு, தாா் சாலை அமைத்தல், அங்கன்வாடி மையம் சீரமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சியில் 100 குடியிருப்புகள் கொண்ட சமத்துவபுரம் உள்ளது. இங்கு, தமிழக அரசின் சிறப்பு நிதியின்கீழ் ரூ.86.75 லட்சத்தில் தாா் சாலை அமைத்தல், அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலைக் கடை கட்டட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகள் புனரமைக்கப்பட உள்ளன. இதில் முதல்கட்டமாக 77 வீடுகளை புனரமைக்கும் உத்தரவுகளை பயனாளிகளுக்கு வழங்கிய அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், வளா்ச்சித் திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
இதில் அந்தியூா் ஒன்றியக் குழுத் தலைவா் வளா்மதி தேவராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சரவணன், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவா் ஈ.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...