திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ. 80க்கு விற்பனை

தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனையானது.

Updated On :19 மே 2022, 10:02 pm

தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப் பகுதி மற்றும் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் விளையும் தக்காளி சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மாா்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகளிடமிருந்து தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனா். மழை தொடரும் வரை தக்காளி விலை உயா்வு நீடிக்கும் எனவும், விலை உயா்வு காரணமாக மக்களிடையே வாங்கும் ஆா்வம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.