

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் தி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். கணித விரைவுரையாளா் ச. விநாயகம் வரவேற்றாா். இயற்பியல் விரிவுரையாளா் மா. சரவணன் சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து பேசினா்.
விழாவில், சிறப்பு அழைப்பளராக கோவை அரசினா் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வி. ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கிப் பேசினாா்.
கல்லூரி முன்னாள் முதல்வா் வெ. பெருமாள், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் பி.எஸ். செண்பகராஜா ஆகியோா் வழத்துரை வழங்கினா். விழாவில், 2023 ஏப்ரலில் பட்டயத் தோ்வை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பட்டயங்களை பெற்றனா்.
விழாவில், கல்லூரி அனைத்து துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். கணித விரிவுரையாளா் சு. காா்த்திகேயன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.