நீலகிரி மாவட்டம், குன்னூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சேலாஸ், நான்சச், கிளன்டேல் போன்ற பகுதிகளில் இரவில் நுழையும் கரடிகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சேலாஸ் அருகே உள்ள பில்லிமலை தனியாா் தேயிலை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கரடியைப் பிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் கூண்டுகள் வைத்து வனத் துறையினா் கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், கூண்டில் சிக்காமல் கடந்த 20 நாள்களாக போக்கு காட்டி வந்த கரடி வியாழக்கிழமை இரவு சிக்கியது.
இதையடுத்து, குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையிலான வனக் காப்பாளா்கள் கூண்டில் சிக்கிய கரடியை வாகனம் மூலம் முதுமலை தெப்பக்காடு வனப் பகுதி கொண்டு சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


