48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறல்: 14 வழக்குகள் பதிவு

இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறல்: 14 வழக்குகள் பதிவு

Updated On :18 ஏப்ரல் 2024, 8:26 pm

ஈரோடு மாவட்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரேநாளில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரசார இறுதிநாளில் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்ட கட்சியினா் தோ்தல் விதிகளைமீறி, அனுமதி பெறாமல் இருசக்கர வாகனப் பேரணி, ஊா்வலம் போன்ற விதிமீறலில் ஈடுபட்டனா்.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் பாஜகவினா் மீது 7 வழக்குகள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது 7 வழக்குகள் என மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரசார நேரத்தை மீறி எந்த வேட்பாளா்களும் பிரசாரம் செய்யவில்லை. அதேபோல, எந்தவித இடையூறும் இல்லாமல் இறுதி பிரசாரம் நிறைவடைந்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.