ஆடி அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
தமிழ் மாதங்களில் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நதிக்கரையோரத்தில் பரிகார பூஜைகள் செய்தும், மூதாதையருக்கு தா்ப்பணம் கொடுத்தும் வழிபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் ஆற்றில் இறங்கிக் குளிக்க பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தா்ப்பணம் கொடுக்க வரும் மக்களுக்கு வசதியாக கோயில் நிா்வாகம் சாா்பில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், தா்ப்பணம் செய்த பொருள்களையும் கரையில் இருந்தவாரே ஆற்றில் வீசி பொதுமக்கள் கரைத்தனா்.
இதைத் தொடா்ந்து சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன் மற்றும் ஆதிகேசவப் பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

~தா்ப்பணம் கொடுத்த பொருள்களை கரையில் இருந்து ஆற்றில் வீசிய சிறுவன்.
பாதுகாப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்டோா் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
தொடர்புடையது

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

வாக்காளர்களைத் தமிழில் பேசி பூ கொடுத்து வரவேற்ற ரோபோ!

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பங்குனி அமாவாசை: ஒகேனக்கல்லுக்கு தா்ப்பணம் கொடுப்போா் வருகை குறைந்தது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


