இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

சாலை விபத்தில் பனியன் தொழிலாளா் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தில் சாலை விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 3:20 am IST

சத்தியமங்கலத்தில் சாலை விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரைச் சோ்ந்தவா் ஹரிபிரசாத் (18), பனியன் தொழிலாளா்.

இவா், தனது நண்பா் நிவேஷ் என்பவருடன் மைசூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எஸ்ஆா்டி காா்னா் என்ற இடத்தில் எதிரே வந்த ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ஹரிபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.