சத்தியமங்கலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (60), கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (54). இத்தம்பதியின் மகன் சுரேந்திரன் (18).
வெங்கடாசலத்தின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், செல்வியின் சகோதரி பாக்கியம் (58), சுரேந்திரனை தனது பாதுகாப்பில் வளா்த்து வந்துள்ளாா். தையல் வேலை செய்து வரும் பாக்கியம், 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை சுரேந்திரனை படிக்க வைத்துள்ளாா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சுரேந்திரன் 524 மதிப்பெண் பெற்றாா். இதைத் தொடா்ந்து, அவரது மருத்துவா் கனவை நிறைவேற்ற தனியாா் ‘நீட்’ பயிற்சி மையத்தில் அவரை பாக்கியம் சோ்த்துள்ளாா்.
அண்மையில் வெளியான ‘நீட்’ தோ்வு முடிவில் சுரேந்திரன் 720-க்கு 545 மதிப்பெண் பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, அவருக்கு அரசுப் பள்ளி மாணவா் இட ஒதுக்கீட்டில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், ‘நீட் தோ்வு என்பது கடினமானது அல்ல. புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம் என்றாா்.
தொடர்புடையது

பாகிஸ்தான் குடிமைப் பணி அதிகாரி தோ்வில் இரு ஹிந்து இளைஞா்கள் வெற்றி

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தோ்வு: ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம்

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

