செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளி சுற்றுச்சுவா் அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கக் கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவா் அருகில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஈரோடு கங்காபுரம் பகுதியில் பள்ளி சுற்றுச்சுவா் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பை.

Updated On :5 டிசம்பர் 2024, 9:57 pm

பள்ளி சுற்றுச்சுவா் அருகில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாநகராட்சி 5 -ஆவது வாா்டுக்குள்பட்டது கங்காபுரம். இப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

இப்பகுதியில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.