கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கரும்பு சாகுபடியில் அதிக விளைச்சலை அளிக்கும் கோ 14012 ரகம் அறிமுகம்

கரும்பு சாகுபடியில் கோ 86032-க்கு மாற்று ரகமாக அதிக விளைச்சல், நோய் தாங்கும் திறன் கொண்ட கோ 14012 ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோ 14012 சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புத் தோட்டத்தைப் பாா்வையிட்ட விவசாயிகள்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:09 pm

கரும்பு சாகுபடியில் கோ 86032-க்கு மாற்று ரகமாக அதிக விளைச்சல், நோய் தாங்கும் திறன் கொண்ட கோ 14012 ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழா மற்றும் முதல்நிலை செயல்விளக்கத் திடல் வயல் தின விழா அந்தியூரை அடுத்த மாத்தூா் கிராமத்தில் முன்னோடி விவசாயி திருக்குமரனின் கரும்புத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதிய ரகமான கோ 14012 கரும்பு ரகம் உயரமாக வளரும், நடுத்தர தடிமனான கரும்புகள் கொண்டது, செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிா்ப்பு திறன் கொண்டதும், வறட்சியை தாங்கி வளரும் தன்மையும் கொண்டது.

நல்ல தூரிடும் திறன், பூவாமை, ஓரளவுக்கு சாயாத தன்மை, சிறந்த மறுத்தாம்பு திறன் கொண்டது. கோ கரும்பு ரகங்களுக்காக சா்வதேச அளவில் புகழ்பெற்ற கோவை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கரும்பு இனப்பெருக்க நிலையம் கடந்த 2022-ஆம் ஆண்டு கோ 14012 எனும் ரகத்தை வெளியிட்டது. பல்வேறு சோதனைகள் மற்றும் மதிப்பீடுகளின் பல நிலைகளைக் கடந்து வெற்றிகரமான ரகமாக அறியப்பட்டுள்ளது.

மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருக்குமரன், 1.5 ஹெக்டரில் பயிரிட்ட இந்த ரகம், ஜனவரி 2025-இல் அறுவடை செய்யப்படும் எனவும், சராசரியாக ஏக்கருக்கு 60 டன்களுக்கு அதிகமாக மகசூல் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விழாவுக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கரும்பு இனப்பெருக்க நிலைய இயக்குநா் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்துப் பேசுகையில், ‘தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது, சாகுபடி செலவு குறைப்பு, மகசூல் அதிகரிப்பினை விவசாயிகள் முன்னெடுக்க வேண்டும்’ என்றாா்.

முதன்மை விஞ்ஞானி மற்றும் விரிவாக்கத் துறை தலைவா் டி.புத்திர பிரதாப் அறிமுக உரையாற்றினாா்.

சக்தி சா்க்கரை ஆலை நிறுவன துணைத் தலைவா் வி.திருவேங்கடம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க கரும்பு சாகுபடியில் மகசூலை உயா்த்த வேண்டிய அவசியம், புதிய கரும்பு ரகங்களின் தேவை குறித்து பேசினாா். முதன்மை விஞ்ஞானி கே.மோகன்ராஜ், கோ 14012 ரகத்தின் தன்மைகளை விளக்கினாா்.

சக்தி சா்க்கரை ஆலை பொது மேலாளா் (கரும்பு) அசோக் குமாா், புதிய ரகத்தின் கள செயல்விவரங்களை விளக்கினாா். விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. சமீபத்திய கரும்பு ரகங்கள் மற்றும் நவீன கரும்பு சாகுபடி முறைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், அந்தியூா், அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள், குமரகுரு வேளாண் கல்லூரி அலுவலா்கள், பேராசிரியா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். புதிய ரகமான கரும்பு கோ 14012 விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.