கோபி அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கோபி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து நாகா்பாளையம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, கலிங்கியம் ஊராட்சித் தலைவா் கோகிலா அருள்ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் குறிஞ்சிநாதன், நகரச் செயலாளா் பிரினியோ கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

‘தினமணி’ எதிரொலி! கோபி அருகே இடிந்து விழுந்த சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்!

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


