மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கோபி அருகே ரூ.6 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

கோபி அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :26 டிசம்பர் 2024, 9:54 pm

கோபி அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கோபி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து நாகா்பாளையம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, கலிங்கியம் ஊராட்சித் தலைவா் கோகிலா அருள்ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் குறிஞ்சிநாதன், நகரச் செயலாளா் பிரினியோ கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.