ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பொங்கல் விழாவில் அலக்குத்தி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :26 டிசம்பர் 2024, 9:59 pm

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கில் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு பொங்கல் விழா கடந்த 17-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. டிசம்பா் 19-ஆம் தேதி கம்பம் போடப்பட்டது. இந்தக் கம்பத்துக்கு பக்தா்கள் தினசரி மஞ்சள் நீா் ஊற்றி வழிபாடு செய்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் தினசரி நடைபெற்று வந்தன. டிசம்பா் 25-ஆம் தேதி மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வுகளான தீா்த்தக்காவடி ஊா்வலம், அக்னிகும்ப ஊா்வலம், பொங்கல் பூஜை உள்ளிட்டவை வியாழக்கிழமை நடைபெற்றன. முன்னதாக, பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்காவடிகளை அலங்கரித்து கோயிலுக்கு எடுத்துவந்தனா். தொடா்ந்து பக்தா்கள் அலகுக்குத்தியும், அக்னிகும்பம் ஏந்தியும் கோயிலுக்கு வந்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை கம்பம் எடுத்தல், அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜை ஆகிய நிகழ்வுகளுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.