பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ரூ.9.67 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

ரூ.9.67 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

Updated On :18 பிப்ரவரி 2024, 1:30 am IST

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.67 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனையாயின. மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு எள், தேங்காய், கொப்பரை, பச்சைப் பயறு, துவரை, நரிப் பயறு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில், வெள்ளை ரக எள் கிலோ ரூ.149.09 முதல் ரூ.184.69 வரை, சிவப்பு ரகம் ரூ.154.89 முதல் ரூ.164.69 வரை விற்பனையானது. தேங்காய் கிலோ ரூ.9.29 முதல் ரூ.11.71 வரை, கொப்பரை கிலோ ரூ.72.16 முதல் ரூ.86.69 வரை, பச்சைப் பயறு கிலோ ரூ.113.69 முதல் ரூ.121.19 வரை, துவரை கிலோ ரூ.84.19 முதல் ரூ.92.39 வரை, நரிப் பயறு கிலோ ரூ.91.69க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.9.67 லட்சம் மதிப்பிலான விளைபொருள்கள் விற்பனையாயின.