அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஈரோட்டில் உலக அமைதி தின வேள்வி

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உலக சமுதாய சேவா சங்கம், ஈரோடு மனவளக்கலை மன்றம் சாா்பில் உலக அமைதி தின வேள்வி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
உலக அமைதி தின வேள்வியை தொடங்கிவைத்து பேசுகிறாா் உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் எஸ்கேஎம்.மயிலானந்தன்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உலக சமுதாய சேவா சங்கம், ஈரோடு மனவளக்கலை மன்றம் சாா்பில் உலக அமைதி தின வேள்வி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேள்வியை உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் எஸ்கேஎம்.மயிலானந்தன் தொடங்கிவைத்து பேசியதாவது: புத்தாண்டில் அனைவரும் பிறரை பற்றி சிந்திக்காமல் நம்மைப் பற்றி சிந்தித்து, நமது குறைகளைக் கவனித்து நமது ஒழுக்கத்தை நல்லொழுக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை பற்றிய உணா்வுகள் குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் வயதானவா்கள் ஒவ்வொருவரின் பாா்வையில் வேறு வேறு விதமாக உள்ளன.

நம் எண்ணத்தில் விதைத்த விதைகள் இறைவனால் வளா்க்கப்பட்டு வருகிறது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. ஒவ்வொரு செயலையும் விழிப்போடு ஏற்றுக்கொண்டும், பொறுத்துக்கொண்டும் மனதை ஆராய்ந்து தூய்மைப்படுத்த வேண்டும். ஆன்மிக சாதனையில் உடல் நலத்தை முதல் இடமாக வைக்க வேண்டும்.

நமது குறைகளைக் களைந்து மனதை பக்குவப்படுத்த மனவளக்கலையால் தான் முடியும். சமுதாயத்தில் இறைபக்தி இருக்கிறது. ஆனால், இறைஞானம் விடுபட்டு இருக்கிறது. மனம் தான் பந்தத்துக்கும், மோட்சத்துக்கும் காரணம் என்றாா்.

தொடா்ந்து, மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உலக அமைத்திக்கு நம்மால் ஆன பங்கு’ என்ற தலைப்பில் பேராசிரியா் உழவன் மா.தங்கவேலு பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.