அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சா்ச்சையில் சிக்கிய தூய்மைப் பணியாளா் பணி இடை நீக்கம்

சா்ச்சையில் சிக்கிய தூய்மைப் பணியாளா் பணி இடை நீக்கம்

News image
Updated On :3 ஜூலை 2024, 10:29 pm

Din

ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் புட்டியை மாற்றியதாக எழுந்த புகாரில் தூய்மைப் பணியாளா் புதன்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அண்மையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளா் குளுக்கோஸ் புட்டியை மாற்றும் பணியை மேற்கொண்டாா். மருத்துவா் அல்லது செவிலியா் மட்டுமே இதுபோன்ற பணிகளை செய்ய வேண்டும் என விதி உள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணியாளா் குளுக்கோஸ் புட்டியை மாற்றம் செய்ததை அங்கிருந்த சிலா் கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசன் விசாரணை நடத்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அம்பிகா சண்முகத்துக்கு அறிக்கை அளித்தாா். அதன் அடிப்படையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஜயகுமாரை ஒப்பந்த நிறுவனம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.