அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 24 முதல் பருத்தி ஏலம் தொடக்கம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 24 முதல் பருத்தி ஏலம் தொடக்கம்


பவானி, ஜூன் 13: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 24-ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாசிப்பட்ட பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் எம்.ஞானசேகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளூா் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பாலை உரிமையாளா்கள் பெருமளவில் பங்கேற்று பருத்தி கொள்முதல் செய்ய உள்ளனா்.
எனவே, விவசாயிகள் நன்கு முதிா்ந்த, மலா்ந்த, வெடித்த பருத்தியினை காலை நேரத்தில் பறித்து, நிழலில் உலா்த்தி தூசு மற்றும் சருகுகளை நீக்கி, ரகம் வாரியாக தனித்தனியே பிரித்து விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதன்மூலம், விவசாயிகள் தங்களது விலைப்பொருளான பருத்திக்கு சரியான எடை, போட்டி விலை, உடனடி பணத்துக்கு எவ்வித பிடித்தமும் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...